உத்தரப் பிரதேசத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் மால்தேபூர் காட் பகுதியில் கங்கை ஆற்றில் 40-க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏற்றி சென்றது. அப்போது அந்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பால்லியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.